tamilnadu

மழையால் சிக்னல் பாதிப்பு: ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் அவதி

 திருநெல்வேலி, ஆக.5- மாஞ்சோலையில் மழையிலும் ஆன் லைன் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் மொபைலில் சிக்னல் இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்தனர். நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது மாஞ் சோலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடந்து வருகிறது. இந்த மழை காலத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறார்கள். இதனால் மாணவ- மாணவிகள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் குடை பிடித்துக் கொண்டு வீ்ட்டுக்கு வெளியே அமர்ந்து கல்வி கற்கும் அவலம் நடந்து வருகிறது. இதனால் மாண வர்கள் கடும் அவதிக்கு உள்ளார்கள்.