tamilnadu

img

4ஜி சேவைகளை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மௌன ஊர்வலம்

திருநெல்வேலி:

பிஎஸ்என்எல்லின்  20வது அமைப்பு தினமான அக்டோபர் ஒன்றாம் தேதி யை நெல்லையில் பி.எஸ்என்.எல் ஊழியர்களும் அதிகாரிகளும் கருப்பு தினமாக கடைப்பிடித்தனர் 

பிஎஸ்என்எல் அறிவித்த 4ஜிடெண்டரை அரசாங்கம் ரத்து செய்ததை கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளைதுவங்குவதற்கு உருவாக்கியுள்ள  தடைகளை நீக்க வேண்டும், பிஎஸ்என்எல்க்கு  4ஜி யை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்வியாழக்கிழமை அன்று உண்ணாவிரத போராட்டம் மற்றும் மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த போராட்டங்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான சூசை மரிய அந்தோணி தலைமை தாங்கினார்.

எஸ் என் இ.ஏ  மாவட்ட பொருளாளர் அச்சுதன் வரவேற்று பேசினார். எஸ் என்.இ.  ஏ மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமாவட்ட செயலாளர் பி.ராஜகோபால் ,  ஏ.ஐ. பிஎஸ்என்எல்.இ.ஏ  சங்க மாவட்ட தலைவர் இளங்கோ அருணாசலம் , பிஎஸ்என்எல்ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆண்ட பெருமாள் ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் மாநில அமைப்புச் செயலாளர் சீதாலட்சுமிசிறப்புரையாற்றினார் மாவட்ட தலைவர் முத்து நன்றி கூறினார் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.