திருநெல்வேலி:
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் 60 ஆண்டுக்கும் மேலாக கிரையத் தொகைமுழுவதும் செலுத்திய நிலையில் குடியிருக்கும் மக்களுக்கு நில உடமையை உறுதி செய்து அந்த மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மத்திய மாவட்ட திமுகசெயலாளர் மு.அப்துல் வஹாப் தலைமையில் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மதிமுக மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.