tamilnadu

மார்ச் 12 அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டி

திருநெல்வேலி, மார்ச் 5- பாளையங்கோட்டையில் அரசு ஊழி யர்களுக்கு விளையாட்டு போட்டி வருகிற  12-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சி யர் ‌ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் அரசு ஊழியர்கள்  மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் வருகிற 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று கலந்து கொள்ளும் போட்டிகளின் விவரத்து டன் நுழைவு படிவத்தை மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண் டும். பெயர் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

;