அக்.31 சிறப்பு முகாம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு திருநெல்வேலி, அக்.26- அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வீரவநல்லூரில் வியாழ க்கிழமை (அக்.31) நடைபெறுகிறது. இது தொடர்பாக நெல்லை தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகா ப்புத் திட்டம்) சி.மின்னல்கொடி வெளி யிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரி யங்களில் பதிவு பெற்ற தொழிலா ளர்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூ தியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமா னம், ஆட்டோ ஓட்டுநர், கைத்தறி, விசை த்தறி, தையல் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்காக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அக்டோபர் 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு வீரவநல்லூர் ரயில்வே பீட்டர் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற வுள்ளது. விண்ணப்பத்துடன் இரு புகைப்ப டம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது தொடர்பாக பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய வற்றின் சான்றொப்பமிட்ட நகலுடன் முகாமில் கலந்துகொண்டு உறுப்பி னராக பதிவு செய்து கொள்ளலாம். மனு தாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பின ராக உள்ளவர்கள் தொழிலாளர் நல வாரி யங்களில் பதிவு பெற இயலாது. இது தொடர்பான மேலும் விவரங்க ளுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவல கம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், இரண்டாவது தளம், பிளாக் எண்-39, வசந்தம் காலனி, திருமால் நகர், திருநெல்வேலி-7 என்ற முகவரியிலோ அல்லது 0462-2555010 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
இடத் தகராறில் பெண் மீது தாக்குதல்
திருநெல்வேலி, அக்.26- திருநெல்வேலி மாவட்டம் செ ங்கோட்டை அருகே உள்ள புளிய ரையை அடுத்த கற்குடியைச் சேர்ந்த வர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி லட்சுமி(63). இவர்க ளுக்கும், மீனாட்சி சுந்தரத்தின் தம்பி சுப்பையா என்பவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இரு ந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட தில், ஆத்திரம் அடைந்த சுப்பையா வின் மகன் சுரேஷ் (34) என்பவர் அரி வாளால் தனது பெரியம்மா லட்சு மியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லட்சு மியை தென்காசி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை பாளை யங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொட ர்பாக புளியரை போலீசார் வழக்குப் பதிந்து சுரேசை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை திருமணம் செய்தவர் கைது
திருநெல்வேலி, அக்.26- நெல்லை மாவட்டம் செங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பட்டு மணி(25). இவருக்கும் இவ ரது உறவினர் மகளான 17 வயது பெண்ணுக்கும் சில மா தங்களுக்கு முன்பு திரு மணம் செய்து வைத்தனர். இந்நிலையில் பட்டுமணியின் மனைவி கர்ப்பம் அடை ந்தார். இதற்காக அவர் சிகிச்சைக்கு அரசு மருத்து வமனை சென்றபோது பட்டுமணியின் மனைவி பெயரை எழுத வயதை கேட்டனர். அப்போது 17 வயது என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவர்கள், 17 வயதில் திருமணம் நடந்தது குறித்து மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, தென்காசி அனை த்து மகளிர் போலீசில் புகார் செய்ததன் பேரில் தென்காசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து பட்டும ணியை கைது செய்தனர்.
அப்துல்கலாம் நூலகம் திறப்பு சிவகங்கை, அக்.26- சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட அப்துல்கலாம் நூலகத் திறப்பு விழா தலை மையாசிரியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பொறியா ளர் பாரதிதாசன், வேலைவாய்ப்பு அலுவலர் (ஒய்வு) சங்கரசுப்பிர மணியன், ஆசிரியர் தமிழ்கனல், பாண்டி யராஜன், தவித்தலைமை ஆசிரியர் சோவி, தமிழாசிரியர் குமரேஷ் ஆகியோர் பேசினர்.