tamilnadu

கொரோனா நிவாரண உதவித்தொகை கேட்டு லிக்காய் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 30- எல்ஐசி முகவர்களுக்கு கொரோனா நிவாரண  உதவித் தொகை வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், பணி  பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி பாளையங்கோட்டையில் வெள்ளியன்று எல்ஐசி முகவர் சங்கம் (லிக்காய்) ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவர் சி.டி.எம்.ராஜன், நிர்வாகிகள் கூரத்தாழ்வார், இசைசெல்வி, சண்முகவேல், சங்கரநாராயணன், முத்தையா, கணபதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.