திருநெல்வேலி, செப்.15- தென் மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் குற்றா லத்தில் உள்ள அனைத்து அருவி களிலும் நீர்வரத்து வெகுவாக குறைந் தது. இந்நிலையில், குற்றால அருவி களின் நீராதாரமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்ததால் குற்றாலத்தில், ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது. சனி, ஞாயிறு என 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், குற்றால வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.