tamilnadu

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் உறுதி

திருநெல்வேலி, ஏப்.7-

சேரன்மாதேவி பகுதியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தொகுதியில் தீவிரவாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் உலகன்குளம், கரிசல்பட்டி, திருவிருத்தான்புள்ளி, புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை கோபாலசமுத்திரம், பத்தமடை, கரிசூழ்ந்த மங்கலம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.சேரன்மாதேவி பேருந்து நிலையம் அருகே ஞான திரவியம் பேசுகையில், விவசாயிகள் நலன் காத்திட, விவசாயகடன்தள்ளுபடி செய்திட, ஜூன் 1-ம் தேதி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்திட உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். பீடி சுற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், விவசாயிகளுக்கு உதவிகள், ரேசன் கடை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். நான் வெற்றிபெற்றால் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கைஎடுப்பேன் என்றார்.

;