திருநெல்வேலி, ஜூலை 28- விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ 7 500 வழங்க வேண்டும் ,60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் பென்சன் ரூ 3000 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவி லில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச தாலுகா செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார் .வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாலுச்சாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர் ஆட்சியர் அலுவலகம் தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத் திற்கு வி.தொ.ச மாநில குழு உறுப்பி னர் கணபதி தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, லெனின்குமார், வேலம் மாள், புஷ்பா ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன் உட்பட 50க்கும் மேற்ப்ட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.