திருநெல்வேலி, ஆக.24- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தாலுகா பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நுண் நிதி நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் நெருக்கடி கொடுக்க கூடாது. ஊரடங்கு முடியும் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்ப கம் தலைமையில் சார்-ஆட்சி யர் அலுவலகம் முன்பு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சார்-ஆட்சியர் இல்லாத காரணத்தால் வட்டாட்சியர் வெற்றி செல்வி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் வாழ்வா? சாவா? போராட்டம். கோரிக்கையை நிறைவேற் றாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறினர். கோரிக்கை குறித்து வட்டாட்சியர் உட னடியாக நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கூறியதன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ராமர்கனி, ஜாக்குலின், கனகா, மேரி உள்பட 100 பெண்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்ட னர். மேலும் இக்கோரிக்கை களை வலியுறுத்தி செப்.2-ம் தேதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரி வித்தனர்.