திருநெல்வேலி, செப்.1- வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் பூலித் தேவரின் 304 வது பிறந்த நாள் நெல் கட்டான் செவலில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் இரா. நடராஜன் தலைமை யில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் மருதையா, கிளைச் செயலாளர்கள் ஆர்.ராஜ கோபால், ஆர்.மீனாட்சிராஜ், மலை யடிக்குறிச்சி வெள்ளத்துரை, வாசு-பே. மாரியப்பன், நெல்கட்டான்செவல் கண பதி சாமி, பூலி.ராமராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.