சாத்தான்குளம் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்ட பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டு சிபிஎம் கரூர் ஒன்றிய குழு சார்பில் வேலாயுதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினர்.