திருநெல்வேலி, மே 30- திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் அலுவலகத்தில் சனிக்கிழமை மறைந்த தோழர் பால விநாயகம் நினைவாக நூலகம் திறக்கப் பட்டது. போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். சங்கக் கொடியை துணைப்பொ துச்செயலாளர் பாலசுப்பிர மணியன் ஏற்றினார். நூலகத்தை சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் திறந்து வைத்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் வரகுணன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.சுடலை ராஜ், பாரதி புத்தகாலய மேலாளர் வென்சுதாமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்