tamilnadu

img

தென்காசி காவல்துறையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூலை 13- சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை இழிவாக பேசியும், சி.ஐ.டி.யு நிர்வாகிகளை அடிக்க முயற்சித்த தென்காசி காவல் ஆய்வாளர் மற்றும் தென்காசி காவல்துறையை கண்டித்து திங்கட்கிழமை  நெல்லை வண்ணார்பேட்டை மேம் பாலத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட செய லாளர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள் சரவணபெருமாள், ஆர்.முருகன், பாலசுப்பிரமணியன், சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் செட்டியூரில் பீடி சங்க ஒன்றிய துணைத்தலைவர் அய்யாத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல் முருகன், சி.பி.எம் ஒன்றிய செயலா ளர் எம்.தங்கம், கிளைச் செயலா ளர் அண்ணாத்துரை   சின்னத்தாய், அற்புத மேரி பங்கேற்றனர்.

 சங்கரன்கோவிலில் 10 இடங்க ளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேரடி திடலில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உ.முத்து பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ், குமார், சுப்பிரமணியன், மாறிவேல் கலந்து கொண்டனர். குருக்கள் பட்டியில் பால்சாமி தலைமை யிலும், பாடபிள்ளையார் கோவில் ரத்தினவேல், அண்ணா நகர் சக்தி வேல். நெசவாளர் காலனி லட்சுமி குவளைக் கண்ணி கரிவலம் மாரி ராஜ், பனவடலிசத்திரம் ஜெயராஜ் உமா பாலன், கீலநீலிதனல்லூர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மேலும் சிவகிரி, வாசுதேவநல்லுர் உள்பட மொத்தம் 93 பகுதிகளில் தென்காசி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.