tamilnadu

img

கீழ்வேளூர் ஒன்றியத்தில் வாலிபர் சங்க உறுப்பினர் சேர்ப்பு விழா

நாகப்பட்டினம், ஜூலை 8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்ப்பு விழா நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் ஞாயிற் றுக்கிழமை துவங்கியது. சங்க மாநிலச் செய லாளர் எஸ்.பாலா துவக்கி வைத்தார்.  இருக்கையில் துவங்கிய விழாவிற்கு  ஒன்றியத் தலைவர் டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் எஸ்.பாலா, தோழர் அசோக் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்திச் சிறப்புரை யாற்றித் துவக்கி வைத்தார்.  வெண்மணியில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார் தலைமையில் உறுப்பி னர் சேர்ப்பு துவங்கியது. ஆந்தைக்குடியில் எம்.எஸ்.ஜோதிநாதன் தலைமையிலும், தேவூரில் ஆர்.கிரிதரன், மரு தூரில் என்.சரவணன், 110.அணக்குடியில் கே. மாதவன், தெற்குப்பனையூரில் வி.போபி நாத் ஆகியோர் தலைமையிலும் நிகழ்ச்சி நடை பெற்றது. என்.எம்.அபுபக்கர், எம்.செல்வராஜ், ஆர்.முத்தையன், எஸ்.சுபாதேவி, எஸ்.பாண்டி யன், டி.ஜோதிபாசு, ஏ.சந்திரசேகரன், வி.செல்வ ராஜ், ஏ.ஸ்ரீதர், எம்.என்.அம்பிகாபதி, எஸ்.மோகன் இங்கர்சால், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டி.துரைராஜ், ஏ.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.