tamilnadu

img

பாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா

புதுக்கோட்டை, ஏப்.24- புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதிகல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும்இணைந்து உலக புத்தக தின விழாவை நடத்தின. விழாவிற்கு ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர்குரு.தனசேகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.ஆர்.குணசேகரன், கே.ரெங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் பேரவைச் செயலாளர் பேரா.சா.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.முன்னதாக உலக புத்தக தின பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் சுயசரிதம் நூலான ‘சத்திய சோதனை’ பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் சுப.தாரகேஸ்வரி வரவேற்க, உதவிப்பேராசிரியர் தர்மபாலன் நன்றி கூறினார்.  

;