tamilnadu

img

பொய் வழக்கை திரும்பப்பெறக் கோரி சுமைப் பணி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 29-  திருச்சி துவாக்குடி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும். பொய்வழக்கை காரணம் காட்டி  பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்க ளுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வெள்ளியன்று டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் டாஸ்மாக் குடோன் முன் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சங்க மனோகர், அருள், வெங்கடேஷ், முத்துராமன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில் ஒரு வார காலத்திற் குள் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமை யில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க தீர்வு காண்பது என முடிவானது. இதனையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.