தஞ்சாவூர், நவ.11- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஜே.சி.ஐ சென்ட்ரல் பணி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புதுகை பூபாளம் கலைக்குழு ஆர்.செந்தில்குமார் பேசினார். மண்டலத் தலைவர் எம்.கே.கார்த்தி கேயன் கலந்து கொண்டார். புலவர் சு.கீர்த்திவாசன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஜேசிஐ மண்டலத் துணைத் தலைவர் என்.பாலசுப்பிரமணியன், மண்டல இயக்குநர்கள் தேன்கூடு பிரபாகரன், ஜி.தனசேகரன், கீரமங்கலம் ஜேசிஐ தலைவர் பி.விஜயராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினார். ஜேசிஐ பேராவூரணி சென்ட்ரல் புதிய தலைவராக கே.சரபோஜி, செயலாளராக எஸ்.ஜெகதீசன், பொருளாளராக எஸ்.மாதவன், துணைத் தலைவர்களாக கே.சந்தோஷ்குமார், ஆர்.பாலமுருகன், வி.வினோத்குமார், ஜெகன்.கோகுல், எஸ்.ஜீவானந்தம், இணைச் செயலாளராக டி.அருள்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், டி.முரளி, எஸ்.நடேசகுகன், எஸ்.சிவராமன், எஸ்.உதயக் கண்ணன், சி.சண்முகநாதன், எம்.கருணாமூர்த்தி, கே.ராஜராஜன், வி.செந்தில்குமார், எம்.பாலகுமாரன், டி.சாம்பசிவம், கே.சீனிவாசன், எஸ்.பார்த்திபன் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.