திருச்சிராப்பள்ளி, செப்,8- திருச்சி மாநகராட்சி 48வது வார்டு சின்னசாமி நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள் ளன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் கடந்த சனிக்கிழமை அடைப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள இரண்டு தெருக்களிலும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரி வித்தும் ஞாயிறு காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை நீக்க வேண்டும். தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் ஞாயிறு அன்று மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செய லாளர் ரபீக், கிளைசெயலாளர்கள், பகுதிக்குழு உறுப்பி னர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜங்சன் பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது. மேலும் தேங்கி கிடந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது