tamilnadu

தலித் மக்களின் புகாரை பெற மறுக்கும் வெங்கமேடு காவல்துறைக்கு தீ.ஒ.மு. கண்டனம்

கரூர், ஜூன் 12- தலித் மக்கள் அளிக்கும் புகாரை வாங்க மறுத்து அவர்களை அலைக் கழிக்கும் வெங்கமேடு காவல்துறை க்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்டக் குழு கண்ட னம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டக்குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் இராஜாங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் பி.பி.பழனிச்சாமி மாநிலக் குழு முடிவு களை விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் பி.ராஜு மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட காதப் பாறை ஊராட்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதன் பேரில் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகளை காணவில்லை என புகார் கொடுக்கும் படி, சிறுமியின் குடும்பத்தை நிர்ப்பந் தித்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளார். காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக் கழிக்கும் வகையில் செயல்படுகிறது.  தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்கள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது மெத்தனப் போக்கோடு செயல்படுகிற காவல்துறைக்கு, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டக் குழு கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. தலித் மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2019 ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகளில் தஞ்சை யில் நடைபெறும் மாநில மாநாட்டு பேரணி பொதுக் கூட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.