திருச்சிராப்பள்ளி, ஆக.7- தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள இயற்கை மரணம், திரு மணம், மகப்பேறு உதவி நிதிகளை உடனே வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதந்தோறும் கூட்ட வேண்டும். பதிவு உதவி தொகை, புதுப்பித்தல் மனுக்களில் முத்திரை யிட்டு சான்றொப்பமிடும் சங்கத்திடமே வாரிய அட்டைகளை வழங்க வேண்டும். தொழிலாளர்களை அலைக்கழிப்ப தையோ, தபால்காரரிடம் இருந்து திரும்பிய அட்டையையோ நலவாரிய அலுவலகத்தில் இருப்பதை தவிர்த்து தொழிற்சங்கத்திடம் வழங்க வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட 17 முறைசாரா தொழிலாளர் நலவாரியங்களுக்கும் சிஐடியு பிரதிநிதி உள்ளிட்ட முத்தரப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை இவை கூட்டப்பட வேண்டும். பணப்பயன் விண்ணப்பித்து முழுமையாக 3 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். நலவாரிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் அரசு விவாதித்து ஒரே சீரான நடைமுறையை மாநிலம் முழு வதும் அமலாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கங் கள் சார்பில் புதனன்று நலவாரிய அலு வலக முற்றுகை போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் வி.கே.ராஜேந்தி ரன், தலைவர் எம்.எஸ்.சேது, பொது தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் செல்வி, தலைவர் கணேசன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தலைவர் சந்திரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வீரமுத்து, சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் பேசினர். கட்டுமானம், ஆட்டோ, சாலை போக்குவரத்து, சுமைப்பணி சிஐடியு சங்க மாநகர், புறநகர் மாவட்ட நிர்வா கிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.