மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி-கனகமணி இணையரின் புதல்வி பி.செளமியா- ஜி.கோபிநாத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நாகை ஜி.வி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து தலைமை வகித்தார். சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன், சி.பி.எம். செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.