திருவாரூர் செப்15- திருவாரூர் தியானபுரம் சிபிஎம் தலைவர் கே.துரைராஜ்-பரிமளா தம்பதியரின் மகள் டி.யோகேஷ்வரி– எம்.ராஜ்குமார் திருமண வரவேற்பு விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமையேற்று மணமக்களை வாழ்த்தினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமசாமி, டி.முருகையன், எம்.பி.கே.பாண்டியன் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், மூத்த உறுப்பினர் கே.ரெங்கசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.