tamilnadu

img

பைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்.... திருட்டுக் கணக்கை தொடங்கியதா அதிமுக-பாஜக?

திருச்சிராப்பள்ளி:
திருச்சியில் வாக்குப்பதிவு இயந்தி ரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆளும் அதிமுக - பாஜக முறைகேடுகளில் ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் அதிக கால இடைவெளி இருப்பதன் மூலம் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய அதிமுக - பாஜக முயற்சி செய்யும் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில், திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த வித போலீஸ் பாதுகாப்பும் இன்றி, இருவர் இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கி.மீ தூரம் கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய போது,தாங்கள் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பணிபுரிவதாக தெரிவித்துஉள்ளனர். எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக கிளம்பியுள்ளனர்.இந்தச் சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தேர்தல்அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள் ளது.

;