புதுக்கோட்டை, மே 8-புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்கள் 42, மாணவிகள் 39 என தேர்வு எழுதிய 81 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். ஏ.முகமது அஜ்மல், பி.முத்தையன், எஸ்.காயத்ரி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.