tamilnadu

திருவாரூரில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த ஆயத்தப் பிரச்சாரம்

திருவாரூர் டிச.6- சிஐடியு மாவட்டக்குழு கூட்டம் திருவாரூரில் மாவட்டத் தலைவர் இரா.மாலதி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் டி.முரு கையன் அறிக்கைகளை சமர்ப்பித் தார். மாநிலச் செயலாளர் ஆர்.மோகன் கருத்துரையாற்றினார்.  கூட்டத்தில், மாவட்ட சங்க உறுப்பினர் பதிவை பத்தாயிரமாக உயர்த்துவதோடு வரும் 8-ஆம் தேதி மாநில செயலாளர் ஜி.சுகுமாறன் பங்கேற்கும் கருத்தரங்கில் அகில இந்திய மாநாட்டு நிதியினை குறிப்பிட்ட இலக்கில் நிறைவேற்றி வழங்குவது, டிசம்பர் 11 ஆம் தேதி மகாகவி பாரதி பிறந்த தினத்தன்று  தொழிலாளர் வர்க்க பெரும்படை யான சிஐடியு அகில இந்திய மாநாட்டின் நிதி வசூல் பணியினை மாவட்டம் முழுவதும் திட்டமிட்ட அடிப்படையில் நடத்திடவும், இந்தி யாவின் மூத்த தொழிற்சங்கத் தலை வர் மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி நினைவைப் போற்றும் வகையில் டிசம்பர் 15 ஆம் தேதியன்று வீடுகள் தோறும் சிஐடியு கொடியேற்றுவது உள்ளிட்டவை முடிவு செய்யப் பட்டது.

மேலும் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களிடையே ஒருங்கி ணைப்பை ஏற்படுத்தவும் தொழிற் சங்க உணர்வுகளை வளர்த்தெடுக்க “தோழமை குடும்ப சங்கமம்” என்ற நிகழ்வை ஐந்து இடங்களில் நடத்துவது, வர்க்க போராட்டத்தின் ஆயதங்களான தீக்கதிர் மற்றும் மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் போன்றவற்றின் சந்தாக்களை அதிகப்படுத்துவது.  அகில இந்திய மாநாட்டை யொட்டி வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயணக்குழுவின ருடன் உ.ராமச்சந்திரன் தலைமையில் திருத்துறைத்துப்பூண்டியில் இருந்து புறப்படும் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு ஜோதி பயணக்குழுவும், என்.அசோக்ராஜ் தலைமையில் பேரளத்திலிருந்து புறப்படும் தியாகி ஜெ.நாவலன் நினைவு ஜோதி பய ணக்குழுவும் சங்கமித்து செல்வதற் கான பணிகளை திறம்பட ஒருங்கி ணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி-8 வேலை நிறுத்தம் குறித்து மக்கள் மத்தியில் வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.  திருவாரூரில் மாவட்ட செயலா ளர் டி.முருகையன், திருத்துறைப் பூண்டியில் மாவட்ட தலைவர் இரா.மாலதி, மன்னார்குடியில் மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல் ஆகியோர் தலைமையில் நடை பெறும் போராட்டத்தை தொழிற் சங்கங்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திட தீவிர களப்பணியாற்றவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தகவலை சிஐடியு மாவட்ட செய லாளர் டி.முருகையன் தெரிவித்துள் ளார்.