tamilnadu

img

காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி முக்கொம்பில் எடமலைபட்டி புதூரைச் சேர்ந்த அக்கள் தம்பி இருவரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கா கிருத்திகா(15) மற்றும் தம்பி ஹரிஹர பிரசாத்(8) ஆகிய இருவரும் எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் நிரில் மூழ்குவதைக் கண்ட அண்ணன் தருண் இவர்களை காப்பாற்றச் சென்றார். இந்நிலையில் தற்போது தருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் உயிரிழந்த கிருத்திகா இன்று வெளியான 10 ம் வகுப்பு தேர்வில் 420 மதிப்பெண் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


;