tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கல் 
திருச்சிராப்பள்ளி, பிப்.2- திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் ஊராட்சியை சேர்ந்த 140 பயனாளிகள், பளுர் ஊராட்சி ஒன்றிய 128 பயனாளிகள், முடிகண்டம் 97 பயனாளிகள், மாத்தூர் ஊராட்சி 113 பயனாளிகள் என மொத் தம் 478 பயனாளிகள் மற்றும் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 498 பயனாளி களுக்கு அரசின் இலவச கறவை பசு மற்றும் வெள்ளாடுகள், மொத்தம் ரூ.69 லட்சத்து 97ஆயிரத்து 620 மதிப்பில் ஆட்சி யர் சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.


உதவியாளர் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

திருச்சிராப்பள்ளி, பிப்.2-  அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏது வாக அவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிதியுதவி அரசால் வழங்கப்படவுள்ளது. தகுதியான பயனாளிகளை திருச்சி மாவட்டத்தில் செயல்படும் உயர் ஆத ரவு தேவையினை மதிப்பீடு செய்யும் குழு மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப் பட உள்ளனர்.  எனவே தகுதி உள்ளோர் தேசிய அடை யாள அட்டையின் அனைத்து பக்கங்க ளின் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -3, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் நியமிக்கப்படவுள்ள உதவி யாளரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -1, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் வரும் 10-ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி ராப்பள்ளி - 1 என்ற முகவரியில் விண்ணப் பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 0431– 2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.