சிபிஎம் கொடியேற்று விழா
திருச்சிராப்பள்ளி, ஆக.3- புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி மாவட்டம் கைலாஷ் நகர் கிளை காட்டூர் பகுதிக்குழு சார்பில் தெருமுனை பிர ச்சாரம், கையெழுத்து இயக்கம் மற்றும் கொடி யேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகு திக்குழு உறுப்பினர் கதிரேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், லெனின், பகுதிக்குழு செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் செல்வசிங் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கிளை உறுப்பி னர்கள் பத்மநாபன், குலசேகரன், பழனி ச்சாமி, வெங்கிடு, அமல்ராஜ், புண்ணிய மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் மாநாடு பயிற்சி முகாம்
திருவாரூர் ஆக3- திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இய க்கம் சார்பில் 27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திருவாரூர் கஸ்தூர்பாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. பயிற்சி முகா மிற்கு பள்ளி முதல்வர் மலர்விழி இன்பராஜ் தலை மை தாங்கினார். மாநாடு குறித்து மாவட்டச் செயலா ளர் யு.எஸ்.பொன்முடி பேசி னார். முகாமை வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.விமலா தொடங்கி வைத்தார். ஆசிரி யர்கள் க.அன்பழகன், ச.பா ஸ்கரன், ப.குமார் ஆகியோர் வாழ்த்தினர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் வா.சுரேஷ் வரவேற்றார். பயிற்சியின் கருத்தா ளர்களாக பா.தண்டபாணி, அ.வீரரமணி ஆகியோர் செயல்பட்டார்கள். நிறை வாக மாவட்ட கல்வி ஒருங்கி ணைப்பாளர் நா.ராமமூர்த்தி நன்றி கூறினார். பயிற்சி முகா மில் 81 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
குப்பை மேடாக மாறிய சாலை
தரங்கம்பாடி ஆக 3- தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை யொட்டியுள்ள பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டு மண் மற்றும் குப்பை கழிவு களை சாலையிலேயே கொ ட்டியுள்ளதால் சாலையில் நடந்துக் கூட செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. அச்சாலை வழியாக வருப வர்கள் கண்ணாடி ஓடுகளை மிதித்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக அதை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.