tamilnadu

img

உணவுப் பொருட்களை கையாள்பவர்களுக்கு பயிற்சி முகாம்

மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சி, மன்னார்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பொது சுகாதாரத் துறையின் சார்பாக உணவுப் பொருள் கையாள்பவர்களுக்கான  மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் பொதுவான நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன . கோட்டூர் பகுதி மருத்துவர் எம்.சக்திவேல், கொரோனா காய்ச்சல் தடுப்பு விழிப்பு ணர்வு உரையாற்றினார் .அனைத்து உணவக பணியாளர்களுக்கும் கை கழுவும் முறை பற்றிய விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை  மன்னார்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் க மணவழகன்,  நகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் கோ.ராஜேந்திரன், பிரபாகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஓட்டல் உரிமையா ளர் சங்கத் தலைவர் ஆர்.சதீஷ்குமார், செயலாளர் ஆர்.பாரதிதாசன், கௌரவத் தலைவர் சுப்புராமன், செந்தில் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .முகாமின் நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நியமன அலுவலர் மரு. பிகே . கைலாஷ் குமார் பார்வையிட்டார்.