மக்கள் நீதிமன்றத்தில் 1636 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி, ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப் பட்டன. தூத்துக்குடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தொடங்கி வைத்தார். மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, மக்கள் நீதி மன்ற நீதிபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 7 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றங்களில் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,636 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.4 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரத்து 746 பைசல் செய்யப்பட்டது. இதேபோல் வழக்கு விசார ணைக்கு வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 183 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. இதன்மூலம் ரூ.1 கோடியே 60 லட்சம் பைசல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,819 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.5 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 746 பைசல் செய்யப்பட்டது. கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதி பதி அகிலாதேவி தலைமையிலும், மாவட்ட முன்சீப் நீதி மன்றத்தில் நீதிபதி முரளிதரன் தலைமையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. வாகன விபத்து, காசோலை மோசடி உள்ளிட்ட மொத்தம் 1,427 வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 462 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.
அஞ்சல்துறை உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி, ஜூலை 14- இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பள்ளி மாணவர், மாணவி கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நிரஞ்சனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்கு விக்கும் விதமாக தீனதயாள் ஸ்பர்ஷ் யோஜனா எனும் உத வித்தொகை திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். புதிதாக கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ரூ.200 செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு ஆக. 26ஆம் தேதி நடைபெறும். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர், மாணவிகள் அஞ்சல் தலை சேகரிப்பு செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர், மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஓராண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடும்பத் தகராறில் மனைவி அடித்து கொலை
தூத்துக்குடி, ஜூலை 14- தூத்துக்குடி தாளமுத்துநகர், இராஜபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் ஏசுவடியான் மகன் பாக்கியமுத்து (57). லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னிபெசன்ட் (55). கடந்த ஓராண்டாக இருவ ரும் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர். இந்நிலையில், சனியன்று இரவு ஆத்திரம் அடைந்த பாக்கியமுத்து, மனைவியின் தலையில் கட்டையால் பல மாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அன்னிபெசன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து, பாக்கியமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.