tamilnadu

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மணல் திருட்டை தடுக்க வேண்டும்.... சிஐடியு வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி:
மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மணல்ரீச்சில் பதிவு செய்த மாட்டு வண்டிகளுக்கு பதிலாக வேறு வண்டிகளில மணல் அள்ளி நடைபெறும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:திருச்சி மாவட்டத்தில் கடந்த சிலமாதங்களாக மாட்டுவண்டி மணல்குவாரி மூடப்பட்டதால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழந்தும், வண்டிமாடுகள் உணவு இல்லாமல் பரிதவிக்கும் நிலையும், கட்டுமான, விவசாய பணிகள் மணல் தட்டுப்பாட்டால் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கனிமவளத்துறையால் கண்டறியப்பட்ட கிளியநல்லூர், மாதவபெருமாள்கோவில், தாளக்குடி, கூகூர் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்காததை கண்டித் தும், கோட்டாட்சியர் அளித்த வாக்குறுதியின்படி உடனே திறக்க வலியுறுத்தியும் செப்.3 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கஞ்சி தொட்டி திறக்கும் போராட் டத்தை நடத்துவது என சிஐடியு சார்பில்அறிவிக்கப்பட்டது.இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் டிஆர்ஓ பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கொள்ளிடம் ஆற்றில் மாதவ பெருமாள் கோவில், தாளக்குடி ஆகிய பகுதிகளில்நவ.5 அன்று மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப்பட்டது. ரீச் திறந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ மற்றும்பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சிஐடியு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கி மணல் அள்ளுவதற்கு பதிவு செய்து வராத வண்டிகளின் பெயரில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.