tamilnadu

img

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல்

மதுரை, ஏப்.26-திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பா.சரவணன் வியாழனன்று வட்டாட்சி யர் அலுவலகத்தில் தேர்தல் அதி காரி பஞ்சவர்ணத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.முன்னதாக வேட்பாளர் பா.சரவணனுக்கு தீர்மானக் குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் பொறுப்பு குழுத் தலைவர் கோ.தளபதி, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.வேலுசாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர மாவட்டச் செயலாளர், இரா.விஜயராஜன், திருப்பரங்குன்றம் தாலுகா செய லாளர் ராஜூ, கே.ராஜேந்திரன், மா.கணேசன், காங்கிரஸ் நிர்வாகி ஜெயராமன், விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப், சிபிஐ தினகரமோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பா.சரவணனுக்கு ச.கனிமொழிஎன்ற மனைவியும் ச.அம்ரித் குமார்என்ற மகனும் ச.நேஷ்மா என்ற மகளும் உள்ளனர்.

;