வங்கி கடன் வழங்கும் முகாம்
திருச்சிராப்பள்ளி, ஜன.25- திருச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிறு, குறு மற்றும் நுண் தொழில் நிறுவனங்களுக்குகடன் வழங்கும் முகாம் ஆட்சியர் சிவராசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வங்கியின் மேலா ண்மை இயக்குனர் கர்ணம் சேகர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இதுவரை 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை சிறு, குறு மற்றும் நுணு ழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப் பட்டுள்ளது. இதை 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள் ளது. முதல் கட்டமாக சிறு,கு று மற்றும் நுண்தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர் களை நேரடியாக சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் 250 வாடிக்கையா ளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் 50 பேர் வீதம் தற்போது வரை 500 பேரு க்கு இத்தகைய தொழில் நிறு வனங்களுக்கு கடன் வழங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 3,300 கிளைகள் உள்ளது. எனினும் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்காக 200 கிளைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் பயிற்சி பெற்ற வங்கி ஊழியர்கள் பணி அமர்த்தப்படு வார்கள். தமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை போன்ற தொழில் சார்ந்த நக ரங்களில் இத்தகைய கிளைகள் திறக்கப் பட்டு பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் வங்கி நிர்வாக இயக்குனர் அஜய்குமார் ஸ்ரீவத்சவா, துணை பொது மேலாளர் சதானந்தமூர்த்தி, ரவீந்தி ரன், ராஜாராம், சரவணன் அசோகன், தியாகராஜன், இளங்கோ, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கங்கா தரன் நன்றி கூறினார்.
நேதாஜி பிறந்த நாள் விழா
திருச்சிராப்பள்ளி, ஜன.25- திருச்சியில், நேரு யூத் வெல்பர் கிளப் மற்றும் ஒயிட்ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, சமுதாய சேவையாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மலைகோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட இளையோர் ஒருங்கி ணைப்பாளர் சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி விழா வை துவக்கி வைத்து சிறப்பாக சமூக சேவை செய்த 82 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் அனைவருக்கும் மரக் கன்றுகள், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பெண்களுக்கு புட வைகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடு களை ஒயிட்ரோஸ் பொதுநல சங்க தலை வர் சங்கர், நேரு யூத் வெல்பர் கிளப் தலை வர் பிரபாகரன் ஆகியோர் செய்திருந்த னர்.
பணி நியமன ஆணை வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஜன.25- அன்பில் அறக்கட்டளை சார்பில் நடை பெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற் றது. முகாமை திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முகாமில் தமிழகத்தில் உள்ள 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. 3500 க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ, மாணவிகள் நேர்காணலில் பங்கேற்ற னர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணையை வழங்கினார். முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, அருண் சேகர், இன்பா, மிளகுபாறை லாசர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்ற மாணவர்களுக்கு நிதி வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஜன.25- திருச்சியில், தமிழ்நாடு கல்வி ஆலோச கர்கள் நலச்சங்கத்தின் 2வது மாநில பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் கல்வியா ளர்களின் நலம் சார்ந்த கோரிக்கைகள் விவா திக்கப்பட்டன. தஞ்சைப் பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட நலிவுற்ற ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கு நிதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இயற்கை விவசாயத்திற்கான வழி முறை, செயல்முறை ஆலோசனை வழங்கப் பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு சான்றிதழ், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தாமோதரன் நன்றி கூறினார்.