tamilnadu

img

வெண்ணாவல்குளத்தை தூர்வாரும் பணி துவக்கம்

அறந்தாங்கி, ஜூன் 12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதி யில் நகரின் பெரும்பான்மை மக்களால் எப்பொழுதும் வற்றா மல் பயன்படுத்தப்பட்டு வந்த வெண்ணாவல்குளம் தற்போது தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.  இதனால் குளக்கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் சேமிக்க கோட்டை பகுதி பொதுமக்கள், சிவன் கோவில் திருப்பணிக்குழுவினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து தரப்பினரிடமும் நிதி பெற்று குளத்தை ஆழப்படுத்தும் வகையில் தூர்வாரும் பணியை புதனன்று துவங்கினர். இதில் வட்டாட்சியர் சுரேஷ்பிரபு, நகராட்சி ஆணையர் வினோத், காவல்துணை கண்காணிப்பாளர் கோகிலா, முன் னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கோட்டை பகுதி பொது மக்கள் பங்கேற்றனர்.