tamilnadu

img

வி.தொ.ச மனுக் கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 13- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ 7500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாநகரில் 7 பஞ்சாயத்து அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பெருகமணி பஞ்சாயத்தில் விதொச மாநகர் மாவட்டச் செயலாளர் தங்கதுரை, ஒன்றிய தலைவர் சுப்ரமணியன், திருப்ப ராய்த்துறையில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கொடியாலத்தில் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், பேரூரில் ஒன்றிய துணை செயலாளர் செல்வமணி,  முத்தரசநல்லூரில் ஒன்றிய துணைத்தலைவர் ஆதி.இளவரசன், கம்பரசம்பேட்டையில் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், உத்தமர்சீலியில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதே போன்று திருவெள்ளறை ஊராட்சி அலுவலகத்தில்  முருகேசன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

;