tamilnadu

img

மின்சாரமின்றி இருண்டு கிடக்கும் குறிச்சி கிராமம்

கும்பகோணம், நவ.13- கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே குறிச்சி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவ தால் கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே குறிச்சி கிராமம்  அண்ணா நகரில் நூற்றுக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்ற னர்.  இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறை வான மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடை யால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர். இதை கண்டித்து கடந்த 3 ஆண்டு களாக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வந்த னர்.  இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடியில் விவசாய பணிகள் பாதிப்பு, வீட்டிற்கு  குறைந்த மின் அழுத்தத்தி னால் பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிப்பு, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதால், கிராம மக்கள் குறிச்சியில் உள்ள மின்சார வாரிய அலு வலகத்தை முற்றுகையிட்ட னர். பின்னர் கும்பகோணம் பந்தநல்லூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்த பந்தநல் லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா, உதவி மின்வாரிய அலுவலர் பரந்தாமன் (பொ) ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டம் கைவிடப் பட்டது.