அறந்தாங்கி, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் அக்னி சிறகுகள் அமைப்பு இணைந்து மறைந்த ஜனாதி பதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை ஏற்றார். காவல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராமன் கலந்து கொண்டனர். ரோட்டரி மாவட்டம் துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் முன்னாள் தலைவர்கள் தட்சிணா மூர்த்தி, செல்வம், பீர் சேக், விஜயா துரைராஜ், ராமன்பரத் வாஜ், பொருளாளர் பாலகிருஷ்ணன், வீரமணிகண்டன், உறுப்பினர்கள் ரவிசங்கர், டாக்டர்.மணிகண்டன், கார்த்திக், அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் வீரையா நன்றி கூறினார். மற்றொரு நிகழ்வாக, கொல்லன் வயல் கிராமத்தில் நிலத்தடி நீர் மேலாண்மையை உயர்த்துவதற்கு அரசின் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம் சார்பில் குளக்கரையில் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன. அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் க.சுரேஷ்குமார் தலைமையில் ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் ராமன் பரத்வாஜ் ஊர் மக்கள் கலந்து கொண்டு பனை மரக்கன்றுகள் நட்டனர்.