பொன்னமராவதி, நவ.11- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.சிவகாசி முயற்சியால் வாழைக்குறிச்சி கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர்களின் குழுவைச் சார்ந்த விவசாயிகளின் ஒத்துழைப்போடு சுமார் 125 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றும் பணி வேளாண் பொறியியல் துறை ஒத்துழைப்புடன் நீடித்த மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு முன்னிலையில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் உளுந்து விதைக்கப்பட்டது. மண்டல துணை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.