சீர்காழி, ஜூன் 24- நாகை மாவட்டம் சீர்காழியில் கே.பி.எஸ்.மணி பேரவையின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவள வனுக்கு பாராட்டு விழா, பொதுக் கூட்டம் பேரவையின் தலைவர் கே.பி. எஸ்.எம்.கணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, திமுக மாநில செய்தி தொடர்பாளர் தமி ழன் பிரசன்னா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஜெ.அமீன், திமுக நாகை மாவட்டச் செயலாளர் நிவேதாமுரு கன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் பா.ரவிச்சந்தி ரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஸ்.ராஜ்குமார் தி.மு.க. முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம் உள்ளிடோர் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவனை பாராட்டி னர்.
இதன்பின் திருமாவளவன் பேசிய தாவது: கூலித் தொழிலாளிகள், தலித் மக் கள் அடிமைபட்டு இருக்கிற காலக கட்டத்தில் அடித்தால் திருப்பி அடி என்று தமிழ்நாட்டை சாராத ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தோழர் பி.சீனி வாசராவ் கூறினார். அப்போதே அவ ரின் சிந்தனை அப்படி தான் இருந்தி ருக்கிறது. அதன் பின்னர் ஐயா கே.பி. எஸ்.மணி கூறி இருக்கிறார். அதன் பின்னர் 2 தலைமுறைக்கு பிறகு தான் அடித்தால் திருப்பி அடி என்று நான் கூறினேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், தமிழக அரசு குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்வதற்கு போதிய முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிய வில்லை. முதலமைச்சரின் வீட்டுக்கு தண்ணீர் லாரிகளில் எடுத்து செல்லப் படுகிறது. ஆனால் சாதாரண மக்க ளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மாநில அரசு இதில் மெத்தனம் காட்டாமல் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல் தமிழக மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழு மையாக கைவிட வேண்டும். மழை வேண்டி தமிழக அரசு யாகம் செய்ய செலவழிக்கும் தொகையை குடி நீருக்கு பயன்படுத்தலாம். வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் தருவ தற்கு தயாராக இருந்தாலும் கூட அதை பெறுவதற்கு ஏன் தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது என திருமாவளவன் கூறி னார்.