tamilnadu

img

ரூ.30 ஆயிரத்திற்கு புத்தகங்களை வாங்கி பள்ளி நூலகத்தை மேம்படுத்திய மாணவிகள்

புதுக்கோட்டை, மே 11-கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு மாணவிகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் ஆயிரம் புத்தகங்களை வாங்கி நூலகத்தை விரிவாக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை கவிஞர் முத்துநிலவன் தலைமையில் நாணயவியல் கழகம் எஸ்.டி.பசீர் அலி மற்றும் அறிவியல் இயக்கத்தினர் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சுமார் 200 புத்தகங்களை தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் மாணவிகளிடம் வழங்கினர். இதுகுறித்து மாணவி சுவாதி கூறுகையில், மாணவிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு பிறகு வரும் மாணவிகளுக்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆயிரம் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைத்துள்ளோம். அரசு வேலைவாய்ப்புக்காக படிக்கும் முன்னாள் மாணவிகளும் இப்புத்தகங்களை படித்து பயன் பெறலாம். இது போல் இனி ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாங்குவோம் என்றார்.