tamilnadu

கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

தஞ்சாவூர், ஏப்.7தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது களத்தூர் கிராமம். இங்குள்ள கவரத் தெருவைச் சேர்ந்தவர் ராசு. இவரது மகன் ரவிச்சந்திரன் விவசாயத் தொழிலாளி, இவருக்கு சொந்தமான கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்திடீரென தீப்படித்து எரிந்தது. இதில் கூரைவீடு முழுவதும் எரிந்து நாசமானது. தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே தெருவில் வசிப்பவர் சுப்பையன் என்பவரின் மகன் முத்துராமலிங்கம் இவரது வீடும் பிற்பகல் சுமார் 3 மணியளவில் தீப்பற்றி கொண்டது. அந்த கூரை வீடும் முழுவதும் எரிந்து நாசமானது.தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். இதே போல் கவரத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையன் மனைவி பார்வதி(60). இவரது வீடும் கடந்த 4-ந் தேதி திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. ஒரே தெருவில் வெவ்வேறுஇடங்களில் உள்ள 3 கூரைவீடுகள் தீயில் எரிந்து நாசமானதில்சதிவேலை எதுவும் உள்ளதா? அல்லது மின் கசிவு காரணமா? என்பது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி 

;