tamilnadu

img

ஊரகத் துறை ஊழியர்களின் மனுக் கொடுக்கும் போராட்டம்

நாகப்பட்டினம், மே 29- ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.4000-, கிராமத் தூய்மைக் காவலரின் ஊதியம் ரூ.3500- எனவும் வழங்கிட வேண்டும். ஊரடங்கு கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம்-(சிஐடியு) சார்பில் நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் ஒன்றியத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைச் செயலாளர் சு.சிவகுமார், எம்.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழ்வேளூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் துணைத் தலைவர் எல்.பி.வசந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மணி பங்கேற்றார். தலைஞாயிறு ஒன்றியத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. டி.எஸ்.மணி கலந்து கொண்டார். கீழையூர் ஒன்றியத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் சி.ஐ.டி.யு. மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், டி.துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். குத்தாலம் ஒன்றியத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைச் செயலாளர் பி.மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.பாலையா பங்கேற்றார். திருமருகல் ஒன்றியத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு உறுப்பினர் பி.லெனின் தலையில் மனு அளிக்கப்பட்டது. எஸ்.மனோகரன் பங்கேற்றார்.