பெரம்பலூர், ஜூன் 24- பெரம்பலூர்- திருச்சி நெடுஞ்சாலையில் துறை மங்கலம் அருகே அரசு போக்குவரத்துக் கழக பணி மனை எதிரில் ஆவின் பால் குளிரூட்டும் நிலைய வளா கத்தில் சுமார் ரூ.53 லட்சம் மதிப்பில் 1000 சதுர பரப்பள வில் அதி நவீன ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயி லாக திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் வே.சாந்தா முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆவின் தலைவர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், ஆவின் துணைத் தலைவர் பிச்சைமுத்து, திருச்சி ஆவின் பொது மேலாளர் எம்.செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலகத்தில் குளிரூட்டப்பட்ட ஐஸ்கிரீம் பார்ல ரும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் உள்ளன.