அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை, குமரி, கோவை, கடலூர் ஆகிய நான்கு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி இந்திய மாணவர் சங்கம் மாபெரும் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இப்பயணங்கள் இன்று (மே 31) திருச்சியில் சங்கமிக்கின்றன. குமரியிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பயணம் புதுக்கோட்டை வழியாக திருச்சி நோக்கி சென்ற காட்சி.