சீர்காழி, ஆக.21- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் முக்கிய பாசன வாய்க்காலாக மூன்று வாய்க்கால்கள் உள்ளன. தெற்கு ராஜன் வாய்க்கால், பொறை வாய்க்கால், புது மண்ணி ஆறு இருந்து வருகிறது. இதனை நம்பி 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் உள்ளன. கொள்ளிடம் பகுதியில் விவசா யிகள் சுமார் 13 ஆயிரம் ஏக்டர் பரப்பில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழ வுப் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் சில பகுதிகளில் சம்பா நெல் நேரடி விதைப்பு பணி களை செய்துள்ளனர். இந்தநிலை யில் மேட்டூரில் தண்ணீர் திறக்கப் பட்டு கடந்த இரண்டு மாதங்கள் ஆகியும், இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
இதுகுறித்து பொறை வாய்க் கால் பாசன விவசாய சங்கத் தலைவர் மனோகர் கூறியதாவது. காவிரி நீர் கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது, அதிலி ருந்து கொள்ளிடம் கடைமடை பகு திக்கு இதுவரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. எனவே விவசாயிகள் சம்பா சாகு படி பணிகள் கேள்விக்குறியா கவே உள்ளது. தற்பொழுது கொள்ளிடம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதனால் ஆயில் இன்ஜின் மற்றும் மின் மோட்டார்களில் உள்ள போர் வால்களில் தண்ணீர் இல் லாததால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். கொள்ளிடம் கடைமடை பகுதி களான பழையபாளையம், எட மணல் உள்ளிட்ட 40 ஊராட்சி களில் இதுவரை பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. எனவே தமி ழக முதல்வர், கொள்ளிடம் கடை மடை விவசாயிகள் நலன் கருதி காலதாமதமின்றி சம்பா சாகுபடி யை தெடர காவிரி நீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.