கும்பகோணம், செப்.6- கும்பகோணம் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எட்டாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் கூட்டம் கும்பகோணம் தொலைதொடர்பு பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தேர்தல் வரும் 16-ல் நடைபெறுகிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் துவங்கிய காலம் முதல் ஆறு முறை பிஎஸ்என்எல் ஊழியர்கள் அங்கீகார தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது இந்நிலையில் ஊழியர் சங்க எட்டாவது தேர்தலில் ஏழாவது முறையாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர் வெற்றிகளை பெற்று 19 ஆண்டு கால பிஎஸ்என்எல் வரலாற்றில் ஒரு சதவீத பங்கினை கூட விற்பதற்கு அனுமதிக்காமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாத்திடவும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்டைவை அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் செல்லப்பா தேர்தல் வெற்றி குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மதியழகன் பொருளாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் பொறுப்பாளர்கள் குருசாமி நித்தியானந்தம் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிநாதன் மற்றும் நாகை காரைக்கால் மயிலாடுதுறை கிளை செயலாளர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.