tamilnadu

முன் விரோதத்தால் வாலிபர் படுகொலை

பொன்னமராவதி, ஏப்.10 -புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளசிவகங்கை மாவட்டம் சுள்ளாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகன். இவரது மகன் சுப்ரமணியன்(35). இவருக்குதிருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.மலேசியாவில் வேலை செய்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். மேற்கண்ட அதே ஊரைச் சேர்ந்தவர் தினேஷ்(28). சுப்ரமணியனுக்கும் தினேஷுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து கைகலப்பாக மாறி உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பொன்னமராவதி சிவன் கோவில் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் சுப்ரமணியன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், பொன்னமராவதி காவல்ஆய்வாளர் கருணாகரன், துணை ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் சுப்ரமணியனை கொலை செய்தது தினேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள தினேஷை பொன்னமராவதி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;