tamilnadu

தரங்கம்பாடி மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி சாதனை


தரங்கம்பாடி, ஏப்.27-நாகை மாவட்டம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வெழுதிய 47 பேரில் 46 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்ற மாணவர்கள், வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் இக்ரம் ரசூல், தலைமையாசிரியர் ஷாஜகான், மௌலானா அபுல்கலாம் ஆசாத் கிராம கமிட்டி தலைவர் சிகாபுதீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


காசநோய் பரிசோதனை முகாம்  


திருச்சிராப்பள்ளி, ஏப்.27-காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்ய நடமாடும் வாகனம் திருச்சி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. வரும் 29ம் தேதி மாநகராட்சி எம்.ஜி.ஆர்.நகர், வண்ணாரபேட்டை, தாராநல்லூர், இ.பி.ரோடு, ஜெயில்பேட்டை, கூவிபஜார், பொன்மலைபட்டி பகுதி, 30ம் தேதி மணப்பாறை ஊராட்சி, வையம்பட்டி ஊராட்சி, கருங்குளம், வைரம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி பகுதி, 1.5.19ம் தேதி அன்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வேங்கூர் கூத்தைப்பார், அல்அமீன் நகர், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கள்ளுக்குடி இனாம்புலியூர், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எட்டரை பகுதிகளுக்கும், 2ம் தேதி அன்று மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேலைமுல்லைநகர், காந்திநகர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், மருவத்தூர், சேவைக்காரன்பட்டி, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை. சோபனபுரம், ஆகிய பகுதிகளுக்கும், 3ம் தேதி முசிறி ஊராட்சி ஒன்றியம், ஆணைப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், கொளக்குடி, மணமேடு, ஆகிய பகுதிகளுக்கும், 4ம் தேதி லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மாந்துரை, சிறுகையூர், கோவண்டக்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கும் நடமாடும் சோதனைக்கூட வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை நடைபெறவுள்ளது.

;