tamilnadu

img

தஞ்சாவூர் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர், ஏப்.16- தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை விழா ஏப்.2 ஆம் தேதி தொடங்கியது. இதில் 15 ஆம் நாள் நிகழ்ச்சியாகசெவ்வாயன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரோட்டம் சுமார் 100 ஆண்டுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக விழாநடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, அரண்மனைதேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜாபோன்ஸ்லே, தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எம்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;